பதிவுகளை படிக்க வந்தமைக்கு - நன்றி.

Tuesday, July 1, 2014

மறுபிறவி,கர்ம வினை,புண்ணியத்தின் பலன்


மறுபிறவி பற்றி  மிக எளிமையான விளக்கத்தில் கூறியது வள்ளலார் மட்டும் தான். பல மதங்கள் மறு ஜென்மம் என்பதை மறுக்கிறது. ஆனால் இந்து மதம் மட்டும் அது உண்மை என்று திட்டவட்டமாக கூறுகிறது.

கீதையில் கண்ணனே கூறியுள்ளார்மானிட ஆன்மா என்பது அழியாது அது மீண்டும் பிறக்கும் என்றும் மனிதன் கர்மம் செய்ய கடமை பட்டவன் என்றான் இங்கு கர்மம் என்பது புண்ணிய பாவ கணக்கு ஆகும்.

சுழுமுனை சித்தர் கூற்று

மனித பிறவிக்கு அடுத்து தேவ,தெய்வ பிறப்பு தான்.

இது எப்படி சாத்தியம் என்றால்? ,ஒரு மனிதன் 1,2,3 ஆம் வகுப்பு படிக்கிறான் என்றால் நிறைய மதிப்பெண் வாங்கினால் அடுத்த வகுப்பிற்க்கு செல்கிறான்

அது போலவேபிறப்பு என்பது செடிகொடிமரம்பறவைவிலங்குமனிதன்தேவர்கள், தெய்வம் என்ற வகுப்புகளாக பிறிந்து வருகிறது. இதில் பாவம் செய்தால் அந்த வகுப்பிலேயே மீண்டும் விழுகிறோம்கவனிக்க மீண்டும் மேல் வகுப்பு செல்வதில்லை .


வள்ளலார் என்கிற ஞான சித்தர் கூற்று

மறுபிறவி

இப்போது வள்ளலார் கூறுவதை கேட்போம் ஒருவன் ஒரு வீட்டை விட்டு காலி செய்து புது வீட்டிற்க்கு காசு கொடுத்து குடி போகிறான் என்றால் அவன் ஏற்கனவே ஒரு வீட்டில் தங்கினான் என்பதை மறந்து விட வேண்டாம். அது போலத்தான் ஆன்மா ஒரு உடம்பில் இருந்து வேரு ஒரு உடம்பிற்க்கு குடி பெயர்கிறது.அவன் செய்த நன்மை பொறுத்து (நிறைய செல்வத்தை) வீடு என்கிற உடம்பு அமைகிறது


கர்ம வினை

இதில் கர்ம வினை என்பது அவன் செய்த பாவ மூட்டை அது அடுத்த பிறவியிலும் தொடர்கிறது. இது எப்படி என்றால் முன்பு கூறியதை போல வேறு ஒரு வீட்டிற்க்கு போன மனிதனின் தீய நண்பன் அந்த வீட்டுக்கும் போவான்மீண்டும் அவ்வீட்டையும் கெடுப்பான். 


அது போல தான் கர்மா என்கிற பாவமும் ஆன்மாவுடன் போகும் மீண்டும் தவறு செய்ய வைத்து மனித வகுப்பிலே படிக்க செய்கிறது. அதனால் முடிந்தவரையில் பாவம் செய்யாமல் தீய நட்பு கொள்ளாமல் நன்மை செய்து வாழ்வோம்   


புண்ணியத்தின் பலன்

அப்போது நாம் செய்த நன்மையின் பலன் என்பது எங்கே என்றால் நாம் செய்த பாவத்திற்க்கு போகும் . இதை விளக்கமாக சொன்னால் நன்மை என்பது நாம் சம்பாதித்து வாங்கும் பணம் போல, பாவம் என்பது செலவு செய்வதற்க்கு வாங்கி கடன் போல, கடன் நிறைய வாங்கி வைத்து பணம் சம்பாதித்தால் அது கடனுக்கு தான் போகும் சொத்தில் சேராது அதுபோல புண்ணியத்தில் சேராது

Monday, January 13, 2014

இந்துக்கள் ஏன் வணக்கம் சொல்கிறார்கள்

வணக்கம் பற்றிய கருத்து
..............................................
  இந்துக்கள் நண்பர்களையோ மற்றவர்களை முதலில் சந்திக்கும் போது வணக்கம் என்று சொல்வது வழக்கம்.... 

ஏன் வணக்கம் சொல்கிறார்கள்?...இந்து மதத்தின் தத்துவத்தின் படி அனைத்து மனிதருக்குள்ளும் அந்த ஒரே இறைவனே ஆன்மாவாக குடிகொண்டிருக்கிறான் என்பது வேதவாக்கு.... 

அனைத்து மனிதர்களையும் வணங்குவதன் மூலம் அவன் அந்த ஒரே இறைவனையே வணங்குகிறார்......... 

ஆகவே இந்துக்களே நாம் வணங்குவோம்....அனைவரின் இதயத்திலும் ஆன்மாவாக வீற்றிருக்கும் அந்த ஒரே இறைவனையே வணங்குவோம்.

இறைவனே அனைத்து உயிர்களாகவும் ஆகியிருக்கிறார்!! 

3.4எந்த ப்ரம்மம் அனைத்து உயிரினங்களாக விளங்குகிறதோ அதுவே இந்த ஆத்மா. 

இவ்விதம் அறிகின்ற ஞானி பேச்சற்றவன் ஆகிறான்.இவன் தன்னிடத்தில் மகிழ்ந்திருக்கிறான்

9.அந்த ஒரே இறைவனே அனைவரின் இதயத்திலும் ஆன்மாவாக இருக்கிறார் - அதர்வ வேதம்……

.2.10 மாசற்ற உடலற்ற ப்ரம்மம் மேலான ஒளி பொருந்திய இருப்பிடமாகிய மனத்தில் உள்ளது. அந்த ப்ரம்மம் துாய்மையானது. எது ஒளிக்கெல்லாம் ஒளியாய் உள்ளதோ அந்த ப்ரம்மத்தை ஆத்மாவை அறிந்தவர்கள் அனைத்தையும் அறிகிறார்கள். - அதர்வ வேதம்…….முண்டக உபநிடதம் 

1.3.12.எல்லா உயிரினங்களுக்குள்ளும் மறைந்திருக்கின்ற இந்த ஆத்மா தெளிவாக விளங்குவதில்லை.கூர்மையான,நுட்பமான புத்தியின் மூலம் நுண்ணிய பார்வை உடையவர்களால் இந்த அத்மா அறியப்படுகிறது.!  -  யஜுர்வேதம்……கட உபநிடதம்